திருக்குறள்

1227.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்.

திருக்குறள் 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்.

பொருள்:

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

மு.வரததாசனார் உரை:

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

சாலமன் பாப்பையா உரை:

காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.